சுதந்திரத்திற்கு முன்பு:
இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தும் வாதாடியும் வந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் சிலரை பற்றி பார்ப்போம்.
மகாத்மா காந்தி:
குழந்தைகளுக்கு சுதந்திரம்,அன்பு,பராமரிப்புச் சூழல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, எந்த வடிவத்திலும் குழந்தைகள் சுரண்டப்படுவது ஆகிய கொடுமைகளுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார்.
முத்துலட்சுமி ரெட்டி:
இந்தியாவின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர் குழந்தை திருமணம் தேவதாசி முறைக்கு எதிராகவும் போராடினார்.
பெரியார்:
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் குழந்தை திருமணம்,ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராகப் போராடினார்.
அம்பேத்கர் :
பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக அரசியல் சாசன சட்டத்தில் சிறப்பு சட்டப்பிரிவுகளையும், கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்தியதன் மூலம் குழந்தையின் உரிமைகளை அவர் நிலை நிறுத்தினார்.
பண்டிட் ஈஸ்வர் சந்திர வித்யா சாகர் :
குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு திரட்டினார்.1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அவர் முக்கிய பங்காற்றினார் இது குழந்தை திருமண நடைமுறையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது.
பாரதியார்:
கவிதைகள் மூலமாகவும் எழுத்துக்கள் மூலமாகவும் அவர் குழந்தைகளுக்ககான கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குழந்தை திருமணத்தை கண்டித்தார்.
அன்னிபெசன்ட் :
சென்னையில் சென்ட்ரல் இந்து பள்ளியை நிறுவி அப்பகுதியில் கல்வி மற்றும் குழந்தை உரிமைகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றினார்.
ராஜாராம் மோகன் ராய் :
குழந்தை திருமணத்தை ஒழிக்க பாடுபட்டார்.
சாவித்ரி பாய் பூலே :
19ஆம் நூற்றாண்டில் குழந்தைகளின் உரிமைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
இந்த சீர்திருத்தவாதிகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக போராடுவதிலும் முக்கிய பங்காற்றினர்
அற்புதமானத் தகவல்.வாழ்த்துக்கள்
ReplyDelete