Wednesday, 7 May 2025

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.

 இந்தியாவில் உள்ள குழந்தைகள் பல்வேறு சமூகப் பொருளாதார காரணிகளால் போதை பழக்கத்துக்கு ஆட்படுகிறார்கள், போதை மருந்துகளை சார்ந்து இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

 இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்காற்றுகின்றன. வறுமை,கல்வி அறிவு இல்லாமை, வேலையில்லா திண்டாட்டம், சம வயதுடைய நண்பர்களின் அழுத்தம், குடும்பம் சீர்குலைவது,வன்முறைக்கும் மனம் சார்ந்த அதிர்ச்சிக்கும் ஆளாவது, சில பகுதிகளில் போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பது  ஆகியவற்றை உள்ளடக்கியது.

 மன அழுத்தம் அல்லது உணர்வு ரீதியான சிக்கல்களை சமாளிக்க அவற்றிலிருந்து தப்பிக்க   அல்லது ஆர்வத்தின் காரணமாக குழந்தைகள் போதைப்பொருளை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தி அதற்கு அடிமையாகலாம்.

 இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் தவறாகப் பயன்படுத்தப்படும் போதை பொருட்கள் :

1.மது 

2. புகையிலை 

3. மோந்துபார்த்து அதன் மூலம் போதையை உள்ளிழுக்க பயன்படுத்தும் பொருட்கள் (  பசை, பெயிண்டை திரவமாக்க பயன்படுத்தப்படும் தின்னர் எனப்படும் ஒருவகை வேதி இயல் பொருள் போன்றவை )

4. கஞ்சா

5. ஓபியாய்டுகள் 


1.மது :

         ( A)குழந்தைகள் மதுவை தவறாகப் பயன்படுத்துவது கவலைகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

(B)  சிறு வயதிலேயே மது  அருந்துவதால் அவர்கள் எல்லாவற்றுக்கும் அடுத்தவரை சார்ந்துஇருக்கும் நிலைக்கு த ள்ளப்படும் அபாயம் உள்ளது.

(C) சிறுவயதிலேயே மது அருந்துவதால் பல விஷயங்களில் பலவீனமான முடிவுகளை எடுப்பது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை சந்திப்பது அபாயகரமான நடத்தைக்கு  உள்ளாவது ஆகிய பிரச்சனைகளை குழந்தைகள் சந்திப்பார்கள்.


2. புகையிலை:

                            

                               (A)குழந்தைகள் சிகரெட் புகைப்பது   அல்லது பிற புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது என்பது அவர்களிடையே போதைப் பொருள் சார்பு நிலை இருப்பதன் இன்னொரு வடிவம்.

                                  (B) நிகோடினுக்கு அடிமையாகவது தீவிரமான ஆரோக்கியம் சார்ந்த பின் விளைவுகளைக் கொண்டு வரும், சுவாச பிரச்சனைகள்   புற்றுநோய்,புகையிலை தொடர்பான பிற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.

3. உள்ளிருக்கும் பொருட்கள் :

                    போதையை உண்டாக்க முகர்ந்து அல்லது சுவாசம் வழியாக உடலுக்குள் செல்லும் பொருட்கள் உள்ளிருக்கும் பொருட்கள் ஆகும்.

(A) உதாரணங்கள்:

                     பசை, பெயிண்டை திரவமாக பயன்படும் தின்னர்கள், பெட்ரோல், ஏரோ சல்,ஸ்பிரேக்கள் மற்றும் வீடு சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்கள் போன்ற ஆவியாகும் கரைப்பான்கள் ஆகியவை போதைக்காக உள்ளிழுக்கப்படும் சில பொருட்கள்.

  (B)பாதிக்கப்படும் உறுப்புக்கள் :

                        மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் பிற உறுப்புக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

4. கஞ்சா:

                பொதுவாக மரிசுவானா அல்லது களை என்று அழைக்கப்படும் கஞ்சா, குழந்தைகள் தவறாக பயன்படுத்தக்கூடிய மற்றொரு போதை பொருள் 

(A) பாதிப்புகள் :

                              சார்பு நிலைக்கும், அறிவாற்றல் குறைபாடுகளுக்கும், மனநல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

 5. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்:

                               ஓபியாய்டுகள்( வலி நிவாரணிகள் ). பென் சோடியா செபைகள் ( மயக்க மருந்துகள் ) அல்லது சில உணர்வுகளை தூண்டுவதற்கு கொடுக்கப்படும் சில மருந்துகள், போன்ற பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சில குழந்தைகள் தவறாக பயன்படுத்தலாம்.

(A )பாதிப்புக்கள் :

6. தூண்டுதல்கள்( மத்திய  நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை தூண்டும் மருந்துகள் ):

             கோகேயின் அல்லது ஆம்பெ டமைன்கள் ள் போன்ற தூண்டுதல் ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் குழந்தைகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம். இந்த மருந்துகள் இருதய பிரச்சினைகளுக்கும் போதைக்கும் அடிமையதால் உட்பட உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


                  

            

No comments:

Post a Comment

குழந்தைகள் போதை மருந்துகளை சார்ந்து இருப்பது / அடிமையாவது.

இந்தியாவில் குழந்தைகள் போதை மருந்தை சார்ந்து இருப்பது என்பது சமீப காலங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.  இந...